அசோகச் சக்கரவர்த்தி அவைக்குள் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்.
அவன் மட்டும் அலட்சியமாக அமர்ந்திருந்தான்.
கலிங்கத்தின் மீது போர் தொடுப்பது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
அவனுக்கு அதில் எந்த அக்கறையும் இருந்ததாகத் தெரியவில்லை. வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த சாமரம் வீசும் பெண்ணின் கழுத்துக்கு கீழே பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.
திடீரெனத் திரும்பிய அசோகரின் பார்வை அவன் மீது நிலைத்தது. அந்த விழிகளில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
அவன் அதற்கும் மசியவில்லை. காலைத் தூக்கி நாற்காலி மீது வைத்துக் கொண்டு கொட்டாவி விட்டான்.
வேறு பக்கம் பார்வையைத் திருப்பிய அசோகர், கலிங்கப் போர் பற்றி தோள்கள் தினவெடுக்க உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.
அப்போது அவன் செய்த காரியம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. காதில் செருகியிருந்த பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு குப்குப்பென்று புகைவிட்டான். அந்த இடம் முழுவதும் பீடி நாற்றம் சூழ்ந்து கொண்டது.
யார்யா அது பீடி புடிக்கிறது. வெளிய போய் புடிய்யா என பின்னால் இருந்து குரல்கள் வந்ததும், சலிப்புடன் எழுந்து தியேட்டர் கதவை திறந்துகொண்டு வெளியில் போனான் அவன்.
வாழ்த்துக்கள்...வருக வருக வலைதள உலகிற்குள் வருக...
ReplyDeleteVery interesting.....
ReplyDeleteRegards
Kumar VR