என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

தடை செய்யப்பட்ட நகரம்

சுமார் 500 ஆண்டுகளாக (1420-1911) மிங் மற்றும் கிங் சாம்ராஜ்யத்தை சேர்ந்த 24 சக்கரவர்த்திகள் பெய்ஜிங்கில் உள்ள தடை செய்யப்பட்ட நகரத்தில் இருந்துதான் சீனாவை ஆண்டார்கள். அரண்மனையின் அனுமதி இல்லாமல் இந்த நகருக்குள் யாரும் நுழையக் கூடாது. மீறுபவர்களுக்கு உயிர் இருக்காது. அதனால் தான் அக்காலத்தில் அனைவரும் இதனை தடை செய்யப்பட்ட நகரம் என அழைத்தனர்.
இந்த நகரம் 3200 அடி நீளமும் 2500 அடி அகலமும் கொண்டது. சுமார் 20 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு விஸ்தீரணமான இந்த நகரை வேகமாக சுற்றிப் பார்த்தாலே குறைந்தது அரை நாள் ஆகி விடும்.

9 ராசியான எண் என கருதப்படுவதால் இந்த நகரத்தில் ஒரு காலத்தில் 9,999 அறைகள் இருந்ததாம். படத்தில் காணப்படும் “உயர்ந்த ஒற்றுமைக்கான அறை” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் தான் நகரிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற கட்டிடமாக விளங்கியது. இங்கு தான் அரசு சம்பிரதாயங்களும் விழாக்களும் கோலாகலமாக நடத்தப்பட்டன.

இந்த தடை செய்யப்பட்ட நகரத்தில் அரசர், அரச குடும்பத்தினர், அவர்களின் பணியாளர்கள் என சுமார் 6000 பேர் வசித்தனர். இதில் வசித்து வந்த கடைசி சக்ரவர்த்தியான புயீ, 1924ஆம் ஆண்டு இங்கிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.

No comments:

Post a Comment