என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 2, 2011

புயல்


புயல் எனை
பிடித்து உலுக்கியது
இலைகள் உதிர்ந்தன
கிளைகள் முறிந்தன
கனிகள் கழன்று
காற்றில் பறந்தன
எதிர்காலம் கேள்விக்குறியாய்
வளைந்து முறைத்தது

இருந்தும்...
நம்பிக்கை வேர்களை
நங்கூரமாய் பாய்ச்சி
புயலைப் பார்த்து
புன்னகைக்கிறேன்

No comments:

Post a Comment