என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, April 14, 2011

பாவம் தூங்கட்டும்..














அதிகாலையை நெருங்கும் வேளை

ஆளரவமற்ற ஏகாந்த சாலை

சோடியம்வேப்பர் வெளிச்சத்தில்

சோம்பல் முறித்து

ஆழ்ந்து தூங்கியது

அந்த தார்ச்சாலை


காயும் பகலில்

கனரக வாகனங்கள்

அரைத்து விரைந்த

அயர்வு போக

ஆழ்ந்து தூங்கியது

அந்த தார்ச்சாலை


வெளிச்ச மயக்கத்தில்

மிகமிக மெலிதாய்

மூச்சுவிடும் - அந்த

கருப்பு குழந்தையை

எழுப்ப மனமின்றி

வண்டியை அணைத்துவிட்டு

சாலையோரம் காத்திருக்கிறேன் நான்...

No comments:

Post a Comment