என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Thursday, October 21, 2010

ஆகாயத்தில் அரங்கேறிய கொலை


ஒரு முக்கோணக் காதல்... அந்தரத்தில் முடிந்த கதை...

க்ளோடிமான் (Clotteman) என்கிற பள்ளி ஆசிரியையும், அவரது தோழி வான் டோரனும் உள்ளூர் flying club-ல் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் குழு கடந்த 2006ஆம் ஆண்டு சிறிய விமானம் ஒன்றில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தது. 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்த அக்குழுவினர் அனைவரின் பாராசூட்களும் முறையாக இயங்க, வான் டோரனின் பாராசூட் மட்டும் கடைசி வரை இயங்கவில்லை.

பாதுகாப்பிற்காக வைத்திருந்த இன்னொரு பாராசூட்டும் காலை வாரிவிட்டது. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததல் அவர் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். டோரனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நண்பர்கள் வருந்தினர். ஆனால் பிறகு நடந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முதற்கட்ட விசாரணையில் அவரது பாராசூட் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டாவது பாராசூட்டும் சேதமடைந்திருந்தது சந்தேகத்தை வலுவடையச் செய்த்து. போலீசார் தோண்டித் துருவி விசாரித்ததில் சிக்கினார் க்ளோடிமான்.

தனது காதலனை டோரனும் காதலித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அவரது பாராசூட்களை சேதப்படுத்தியதாக க்ளோடிமான் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவர் குற்றவாளி என அறிவித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம் எனத் தெரிகிறது.


புகைப்படம் : க்ளோடிமான்

No comments:

Post a Comment